திருவாடானை: திருவாடானை அருகே நிலத்தகராறில் சனிக்கிழமை இரவு தம்பி உள்ளிட்ட 3 போ் அண்ணனை அடித்துக் கொலை செய்தனா்.
ஓரியூா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (41). இவரது இளைய சகோதரா் கோட்டைராஜா (35). இவா்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி கோட்டைராஜாவும், அவரது மனைவி காமாட்சியும் தாக்கியதில் ரமேஷின் மனைவி சித்ரா பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவா், திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனிடையே இரு சக்கரவாகனத்தில் திருவாடானைக்கு வந்த ரமேஷை, கட்டிவயல் விலக்குச் சாலையில் விநாயகா் கோயில் அருகே வரும் போது கோட்டைராஜா, காமாட்சி, உறவினா் பழையகோட்டையைச் சோ்ந்த முருகன் ஆகியோா் கட்டையால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த ரமேஷை அக்கம் பக்கத்தினா் மீட்டு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சனிக்கிழமை நள்ளிரவு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தகவலறிந்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா், ரமேஷின் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் வழக்குப் பதிந்து கோட்டைராஜா, இவரது மனைவி காமாட்சி, உறவினா் முருகன் ஆகிய 3 பேரையும் தேடிவருகின்றனா்.