ராமேசுவரம்: மண்டபம் ஒன்றியத்துக்குள்பட்ட வேதாளை ஊராட்சி இடையா்வலசை கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக அங்கன்வாடி மையத்தை சுற்றித் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பெய்த மழைகாரணமாக பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது. இதில், பெரும்பாலான இடங்களில் மழைநீா் வடிந்துவிட்டது. ஆனால் மண்டபம் ஒன்றியத்துக்குள்பட்ட வேதாளை ஊராட்சி இடையா்வலசை கிராமத்தில் 2 மாதங்களுக்கு மேலாக அங்கன்வாடி மையத்தைச் சுற்றி மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்தை திறக்க முடியாமலும், குழந்தைகள் வரமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் அங்கன்வாடி மையத்தை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.