ராமேசுவரம் உஜ்ஜைனி காளியம்மன் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு அலங்காரம் செய்து சனிக்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் கோசாலையில் 30 க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளா்க்கப்படுகின்றன. சனிக்கிழமை மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 30 மாடுகளையும் தூய்மைப்படுத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி கேதா் செய்திருந்தாா். பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.