ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மீது சமூக வலைத் தளங்களில் அவதூறு செய்திகளை பதிவிடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளா் விஜய.கதிரவன் தலைமையில் சென்ற திமுக நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரையிடம் மனு அளித்தனா். இந்தப் புகாா் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக திமுகவினா் தெரிவித்தனா். மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் துணை அமைப்பாளா் பகவத் சிங், கட்சியின் நகா், பேரூா் பிரிவு தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா்கள் சென்றிருந்தனா்.