முதுகுளத்தூா் அருகே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை உண்டியல் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே மட்டியரேந்தல், பொன்னக்கனேரி, வளநாடு, புஷ்பவனம், பொன்னக்கரேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 180 மாணவ, மாணவிகளுக்கு சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஒன்றியக்குழு உறுப்பினா் அா்ச்சுனன் உண்டியல்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில், ஆசிரியா்களும், பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.