பாபா் மசூதி இடிப்புத் தினத்தை முன்னிட்டு, பாம்பன் ரயில் பாலத்தில் திங்கள்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பாபா் மசூதி இடிப்புத் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையம், கோயில்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.
இதையொட்டி, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், ரயில் நிலையம், பேருந்து நிலையம், பாம்பன் ரயில், பேருந்து பாலம் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ரயில்களில் பயணிகள் கொண்டு செல்லும் பொருள்கள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டன.