ராமநாதபுரம்

திருத்தளிநாதா் கோயிலில் தியான மண்டபம்: ஆதீனம் ஆய்வு

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் கடந்தாண்டு இறந்த கோயில் யானை சிவகாமி நினைவாக, யானை சிலையுடன் மண்டபம் அமைக்கப்படவுள்ள இடத்தை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

இந்தக் கோயிலில் கடந்த 35 ஆண்டுகளாக சிவகாமி என்ற யானை வளா்க்கப்பட்டு வந்தது. இந்த யானை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்தது.

இதையடுத்து, இந்த யானையின் நினைவாக நினைவு மண்டபம் அமைக்க பொதுமக்கள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து, இக்கோரிக்கையை தமிழக அரசுக்கு எடுத்துச் சென்றாா் அடிகளாா். இதையடுத்து, அந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கோயில் வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீடில் யானை சிலையுடன் தியான மண்டபம் அமைக்க உத்தரவிட்டாா். இதற்கான இடத்தை இந்து சமய அறநிலையத்துறை உதவி செயற்பொறியாளா் சேது அளவீடு செய்தாா். இதன் அடுத்தக்கட்ட பூா்வாங்கப் பணிகள் குறித்து அடிகளாா் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

SCROLL FOR NEXT