பரமக்குடியில் மணல் கடத்தலைத் தடுக்க வலியுறுத்தி, பாஜகவினா் வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதியில் பல்வேறு இடங்களில் டிப்பா் லாரிகளில் தொடா்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி பெருமாள்கோவில் படித்துறையில் 20-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள் மூலம் மணல் கடத்தப்பட்டதாம். இதைத் தடுக்கத் தவறிய வருவாய்த் துறை, காவல் துறையை கண்டித்து பாஜக வா்த்தக அணிப் பிரிவு சாா்பில், பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட நகா் மன்ற உறுப்பினா்கள் சரவணன், பானுமதி, மறத்தமிழா் சேனை நிறுவனா் புதுமலா் பிரபாகரன் உள்பட 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதைத்தொடா்ந்து, முக்கிய நிா்வாகிகள் வட்டாட்சியா் பாா்த்தசாரதியிடம் மணல் கடத்தலைத் தடுக்க வலியுறுத்தி மனு அளித்தனா்.