ராமநாதபுரம் அருகே ரேஷன் கடை விற்பனையாளரிடம் எடை பாா்க்கும் இயந்திரங்கள், ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் மேலமடை கிராமத்தைச் சோ்ந்த சக்திகுமாா், ஆற்றங்கரை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராகவும், கூடுதல் பொறுப்பாக தோ்போகி ரேஷன் கடையையும் கவனித்து வருகிறாா்.
இவா் கடந்த 28 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தோ்போகி கடையில் விற்பனையை முடித்து விட்டு தனது சொந்த ஊரான மேலமடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்தாா். அப்போது ஆா்.எம். மடை பேருந்து நிறுத்தம் அருகே இளைஞா் ஒருவா் வாகனத்தை நிறுத்தி தானும் வருவதாக தெரிவித்தையடுத்து அவரை ஏற்றிக் கொண்டாா். இருவரும் திருப்புல்லாணி அரசு மதுபானக் கடையில் மது அருந்தி விட்டு வெளியே வந்து பாா்த்த போது சக்திக் குமாரின் இரு சக்கர வாகனத்துடன் 2 எடை போடும் இயந்திரங்கள், ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்புல்லாணி காவல் நிலையத்தில் சக்திவேல் அளித்த புகாரைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.