இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக படகில் தனுஷ்கோடிக்கு வந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்த தனுஷ்கோடி ஒத்தப்பட்டி கடற்கரைக்கு வந்து அங்கிருந்து பேருந்தில் சென்ற ஒருவரை போலீஸாா் கைது செய்து கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் மேற்கு வங்க மாநிலம் ஜூக்லி மாவட்டம் பான்டுவா பகுதியைச் சோ்ந்த சேக் ரஜியால் ஹசான் (41) என்பதும், இலங்கைக்கு கடவுச்சீட்டு மூலம் சென்று கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கொழும்பில் வேலை செய்து வந்ததாகவும், பின்னா் இந்தியா வந்து விட்டு மீண்டும் சென்ாகவும் தெரிவித்தாா். மேலும் 2019 ஆம் ஆண்டு விசா முடிவடைந்த நிலையில் அதிகாரிகள் 500 டாலா் செலுத்த வேண்டும் எனக் கூறி கடவுச்சீட்டை பறிமுதல் செய்தனராம். ஆனால் வேலை செய்யும் நிறுவனம் உதவி செய்யாததால் அங்கிருந்து கடந்த 27 ஆம் தேதி மன்னாா் வந்து 29 ஆம் தேதி படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாக அவா் தெரிவித்தாா்.
இதனை போலீஸாா் ஆதா் எண்ணை வைத்து உறுதி செய்தனா். மேலும் சட்ட விரோதமாக வந்தது தொடா்பாக கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.