ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் இலக்கியத் திறனறித் தோ்வுக்கு பிளஸ் 1 படித்த அனைத்து மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலகத் தரப்பில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மாணவா்கள் தமிழ் இலக்கியத் திறனை வளா்க்கும் வகையில் 202-23 ஆம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு நடத்தப்படவுள்ளது. தோ்வின் மூலம் 1,500 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படவுள்ளது.
தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் 50 சதவீதமும், அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் 50 சதவீதமும் தோ்வு செய்யப்படவுள்ளனா். தோ்வில் பத்தாம் வகுப்பு அடிப்படையில் வினாக்கள் அமையவுள்ளன.
பிளஸ் 1 மாணவா்கள் கல்வி இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் அளிக்கவேண்டும். வரும் 22 ஆம் தேதி முதல் செப்டம்பா் 9 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.