ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்புக் குறைதீா்க்கும் கூட்டம் ஆக.25 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கான குறைதீா்க்கும் கூட்டம் ஆக.25 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், படைவீரா்களின் குடும்பத்தினா் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.