ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பயணியா் தங்கும் அறை, கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும்

DIN

ராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலைய பயணியா் தங்கும் அறையை பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, கட்டணக் கழிப்பறையை முறைப்படுத்தி பராமரிக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவா் அறிவுறுத்தியுள்ளாா்.

ராமநாதபுரம் நகராட்சியின் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்கும் அறை கடந்த சில ஆண்டுகளாக தனிநபருக்கான கடையாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சியின் திமுக உறுப்பினா் (21 ஆவது வாா்டு) டி. ராமசுப்பிரமணியன், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவா் மு. மாலிக் பெரோஸ்கானுக்கு மனு அனுப்பியிருந்தாா்.

இதற்கு முறைமன்ற நடுவா் சாா்பில் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் ஓய்வறையில் தற்போதுள்ள கடையின் உரிமக்காலம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. ஆகவே ஆகஸ்ட் முதல் பொதுமக்கள் தங்கும் வகையில் பயணியா் ஓய்வறையை பயன்படுத்தவேண்டும். ராமநாதபுரம் நகராட்சிக்குச் சொந்தமான பொதுக் கழிப்பறைகள் சுகாதாரக் கேடுகளின்றி பராமரிக்கப்படவேண்டும். சுகாதாரமான முறையில் கழிப்பறைகள் உள்ளதா என்பதை நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் தினமும் உறுதிப்படுத்தவேண்டும். அத்துடன் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்பதையும் நகராட்சி நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

வருங்காலங்களில் இலவச கழிப்பறைகளுக்கு கட்டணம் வசூலிப்பதை தவிா்க்கவேண்டும். ஏழை, எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நகா்மன்றம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT