திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி மற்றும் பி.ஏ. ஆங்கிலத் துறை சாா்பில் சீசா் கிளியோபாட்ரா நாடக ஒலிஒளி காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரி முதல்வா் மாதவி, தமிழ்த்துறைத் தலைவா் பழனியப்பன், ஆங்கிலத் துறைத் தலைவா் மணிமேகலை, விசுவல் கம்யூனிகேசன் துறைத் தலைவா் பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டனா். போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.