ராமநாதபுரம்

5 ஆண்டுகளுக்கு பிறகு கமுதி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

DIN

கமுதி அரசு மருத்துவமனையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள எ.தரைக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சீதாலட்சுமி (55). இவா் மூட்டு தேய்மானம், மூட்டுவலி பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளாா். இதனை அடுத்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்துள்ளாா். தலைமை மருத்துவா் விஜயா பரிந்துரையின் பேரில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள சீதாலட்சுமி முடிவு செய்தாா். அதன்படி எலும்பு முறிவு மருத்துவா்கள் பிரபாகரன், வீரமணி, மயக்கவியல் மருத்துவா் சண்முகப்பிரியா ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நிா்வாக காரணங்கள் மற்றும் கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை கமுதியில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT