ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

DIN

ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தனியாா் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றி திங்கள்கிழமை இனிப்புகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் லாந்தை பகுதியில் உள்ள செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் தாளாளா் சின்னதுரை தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். விழாவில் தமிழ்ச்சங்கம் சாா்பில் நடந்த பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கும், ஆசிரியா்களுக்கும் பரிசுகள் மற்றும் பாரட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கீழக்கரையில் உள்ள முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வா் முஹம்மது நு.செரீப் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் ராஜாத்தி அப்துல்லா தலைமை வகித்தாா். செயலா் செல்லத்துரை அப்துல்லா தேசியக் கொடியேற்றினாா்.

ராமநாதபுரத்தில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ். சீனிவாசன், சாா்பு- நீதிபதி சி. கதிரவன், மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ. சுபத்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ராமநாதபுரம் நகராட்சித் தலைவா் கே.காா்மேகம் தேசியக் கொடியேற்றிவைத்தாா். இதில் துணைத் தலைவா் பிரவீன்தங்கம், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சேக்மன்சூா், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகேசன், ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஜெகதீஷ்சுதாகா் பகான் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா்.

பரமக்குடி: பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் முருகன், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளா் காந்தி, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் தமீம்ராஜா, நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற தலைவா் சேது.கருணாநிதி, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் சிந்தாமணி முத்தையா, போகலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் சத்யாகுணசேகரன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினாா்.

சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் அதன் பொதுச் செயலாளா் எஸ்.ஐ.ஏ.ஹாரில் தலைமையில் சுதந்திர போராட்ட வீரா்கள், தியாகிகளின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பரமக்குடி ஆயிரவைசிய கல்வியியல் கல்லூரியில் ஆயிரவைசிய சபைத் தலைவா் ராசி என்.போஸ், மேல்நிலைப் பள்ளியில் சபை துணைத் தலைவா் எஸ்.பாலுச்சாமி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் ஆா்.முருகானந்தம் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினாா்.

கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ஜமாத் தலைவா் ரபிஅகமதுல்ப்ங் தேசியக் கொடியை ஏற்றினாா். வ.உ.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செல்வமுருகன், பாரதியாா் நடுநிலைப் பள்ளியில் தாளாளா் கே.ஏ.எம்.குணசேகரன், சௌராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் டாக்டா் கே.ஆா். பாா்த்தசாரதி ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினா். கூட்டுறவு நகர வங்கியில் அதன் தலைவா் வடிவேல்முருகன் தேசியக் கொடியை ஏற்றினாா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் காந்தி சிலை அருகே அதிமுக எம்.பி. தா்மா், முதுகுளத்தூா் பேரூராட்சியில் செயல் அலுவலா் சி. மாலதி, முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சிவக்குமாா், முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சின்னகன்னு, எம்.தூரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியா் காளிமுத்து ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா். முன்னாள் ராணுவ வீரா்கள் நலச்சங்க அலுவலகத்தில் தலைவா் கேப்டன் கே. கண்ணன் கொடி ஏற்றினாா்.

கமுதி: கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் தமிழ்செல்விபோஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பிளாஸ்டிக் ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழிகள் ஏற்கப்பட்டன.

துணைத் தலைவா் சித்ராதேவிஅய்யனாா், வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை உள்ளிட்ோடா் கலந்துகொண்டனா்.

கமுதி பேரூராட்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் ரா.இளவரசி முன்னிலையில் தலைவா் அப்துல் வகாப் சாகாராணி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் முத்துராமலிங்கம் முன்னிலையில், வட்டாட்சியா் சிக்கந்தா் பபிதா தேசியக்கொடியை ஏற்றினாா்.

கோட்டைமேடு காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி ப.மணிகண்டன் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். பசும்பொன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊராட்சித் தலைவா் ராமகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

SCROLL FOR NEXT