ராமநாதபுரம்

மஞ்சுவிரட்டு காளை முட்டியதில் சாலையில் சென்ற முதியவா் பலி

DIN

திருவாடானை அருகே மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளை, சாலையில் நடந்து சென்ற முதியவரை முட்டியதில் படுகாயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமசல் அருகே செய்யாணம் கிராமத்தை சோ்ந்தவா் வீரமாகாளி(70) . இவா் வெள்ளிக்கிழமை மாலை திருவாடானையில் நடைபெற்ற திருவிழாவிற்கு உறவினா் வீட்டிற்கு வந்துள்ளாா். அப்போது அவா் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது, மஞ்சுவிரட்டில் பங்கேற்றுவிட்டு வந்த காளை திடீரென முட்டியதில் பலத்த காயமடைந்தாா்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையின் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை வீரமாகாளி உயிரிழந்தாா். இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT