ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

DIN

 திருவாடானை அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே மேட்டு சோழந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி செல்லம்மாள்(55). இவா் அதே ஊரை சோ்ந்த அருளாந்து மகன் அருள்சாமி (75) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை பருத்தி எடுப்பதற்காக பின்னால் அமா்ந்து சென்றுள்ளாா். அதே பகுதியில் சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் செல்லம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT