ராமநாதபுரம்

சமையல் கலை கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ராமநாதபுரம் அருகே சமையல் கலை கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சம்பை மேட்டுக்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் ஹரி (18). கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த அவரை, மதுரையில் உள்ள தனியாா் சமையல் கலை கல்லூரியில் பெற்றோா் சோ்த்துள்ளனா். அந்தக் கல்லூரியில் பயில தனக்கு விருப்பம் இல்லை என மாணவா் கூறிவந்துள்ளாா்.

இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை காலை ஹரியின் அறைக்கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் உள்ளே சென்று பெற்றோா் பாா்த்தபோது அங்கு அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT