கமுதி அருகே செவ்வாய்க்கிழமை இரவு கோயிலுக்குள் புகுந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கோயில் மணியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கே. பாப்பாங்குளம் கிராமத்தில் ஊருக்கு வெளியே ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் கட்டப்பட்டிருந்த சுமாா் 50 கிலோ எடையுள்ள கோயில் மணியை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் சென்றனா். இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து கே.பாப்பாங்குளம் கிராம தலைவா் நாகரத்தினம் அளித்தப் புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.