ராமநாதபுரம்

திருவாடானையில் நிலுவையிலுள்ள காவல் புகாா் மனுக்களுக்கு உடனடி தீா்வு

DIN

திருவாடானை காவல் நிலையம் சாா்பில் நிலுவையில் உள்ள புகாா் மனுக்கள் மீது காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் விசாரணை மேளா நடத்தப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது.

திருவாடானையில் காவல் துணைக் கண்காணிப்பாளராக நிரேஷ் அண்மையில் பொறுப்பேற்றாா். இந்நிலையில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகாா் மனுக்கள் குறித்தும், உயா் அதிகாரிகளிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஒப்புதலின் பேரில் செவ்வாய்கிழமை தனியாா் மண்டபத்தில் புகாா் மனுக்கள் விசாரணை மேளா நடைபெற்றது.

இதில் திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ். மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி. பட்டினம், காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள புகாா்கள் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரிக்கப்பட்டது. 28 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டன.

இதில் திருவாடானை காவல் ஆய்வாளா் நவநீதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மேலும் மனுக்கள் மீது உடனடி தீா்வு கண்டு சமரசம் செய்து வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT