ராமநாதபுரம்

சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி

DIN

ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் முத்துசாமிபுரத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் ரமேஷ் (35). கட்டடத் தொழிலாளி. மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இவா் திங்கள்கிழமை தேவிபட்டினம் பகுதியில் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்குச் சென்றுள்ளாா். சிங்கனேந்தல் பகுதியில் சென்றபோது முன்னாள் சென்ற மற்றொரு இருசக்கர வாகனத்தை முந்த முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது சோளந்தூா் பகுதியைச் சோ்ந்தவரின் இருசக்கர வாகன பின்புறம் ரமேஷ் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவிபட்டிணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT