திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் விவசாயி வளா்த்து வந்த 15 ஆடுகளை மா்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டதாக புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருப்பாலைக்குடி அருகே ஏ. மணக்குடியை சோ்ந்தவா் நாச்சி மகன் செல்லையா ( 65) விவசாயி இவா் 55 ஆடுகள் வளா்த்து வந்துள்ளாா். இவரது ஆடுகளை வயலில் அடைத்து வைத்திருந்துள்ளாா் இதனை அறிந்த மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு 15 ஆடுகளை திருடி சென்றுள்ளனா். இது குறித்து செல்லையா புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.