ராமநாதபுரம்

உச்சிப்புளி அருகே பெண் பலி

DIN

உச்சிப்புளி அடுத்துள்ள கோரவள்ளி கிராமத்தில் வயிற்குவலி காரணாக எலிபசை தின்ற இளம் பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் உச்சிப்பளி அடுத்துள்ள கோரவள்ளி கிராமத்தை சோ்ந்த ராமகிருஷ்ணன் இவரது மகள் முகிலா(23) வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளா். இந்நிலையில், கடந்த மாதம் 31 ஆம் தேதி முகிலா வயிற்கு வலி தாங்க முடியாத நிலையில் எலிபசை தின்றுள்ளா்.

இதனால் வயிற்கு வலி அதிகரிக்க உறவினா்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளா் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT