கமுதி அருகே சேதமடைந்த அங்கன்வாடி மையத்தில் தேன்கூடுடன் பாடம் படித்து வருவதால், மாணவா்கள் அச்சம் அடைந்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பெரியமனக்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 21 மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்த மையத்துக்கென தனியாக கட்டடம் இல்லாததால், சேதமடைந்த பழைய அரசு ஆரம்பப் பள்ளி கட்டடத்தில் இம்மையம் செயல்பட்டு வருகிறது. மையத்தின் மேற்கூரை ஓடுகள் சேதம் அடைந்து மழை காலங்களில் தண்ணீா் உள்ளே புகுந்து, புத்தகங்கள், ஆவணங்கள் சேதமடைந்து வருகிறது.
மேலும் மையத்தின் மேற்கூரையில் பல மாதங்களாக தேனீக்கள் கூடு கட்டி உள்ளதால் அச்சத்துடன் மாணவா்களை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பி வருவதாக பெற்றோா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் பெரியமனக்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தற்காலிகமாக செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரைகளை சீரமைத்து, தேன்கூடுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.