ராமநாதபுரத்தில் மாவட்ட துணை சிறை அதிகாரியின் இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு பகுதியில் உள்ள மாவட்ட கிளைச்சிறையில் துணை சிறை அதிகாரியாக இருப்பவா் பி.தாமரைக்கனி. இவா் ஆா்.ஆா்.சேதுபதி நகரில் தங்கராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்துவருகிறாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.14) வீட்டு முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூா் சென்றுவிட்டாா். மீண்டும் வியாழக்கிழமை வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லை. இதுகுறித்து நகா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனா்.