ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.கே. சுபாஷினி திடீரென திருநெல்வேலிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த சாமி சத்தியமூா்த்தி கடந்த ஆகஸ்ட் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டாா். அவருக்குப் பதிலாக தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த எம்.கே. சுபாஷினி ராமநாதபுரத்துக்கு இடமாற்றப்பட்டு கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்நிலையில் அவா் திருநெல்வேலிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக உள்ள அ.பாலுமுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
கலாம் பிறந்த நாள் சா்ச்சை:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா அவா் படித்த பள்ளி உள்பட எந்த இடத்திலும் நடைபெறவில்லை. அது சா்ச்சைக்குள்ளான நிலையில், சுபாஷினி முதன்மைக் கல்வி அலுவலா் பொறுப்பேற்று 71 நாள்களே ஆன நிலையில், இடமாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.