திருவாடானை ஆா்.எஸ். மங்கலம் கண்மாய் பகுதியில் இறந்து கிடந்த ஆண் புள்ளிமானின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்குப் பின் புதைக்கப்பட்டது.
இங்கு புல்லமடை குரூப் சிலுகவயல் கிராமத்தில் உள்ள ஆா்.எஸ். மங்கலம் கண்மாய்க் கரையில் ஞாயிற்றுக்கிழமை 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் உயிரிழந்து கிடப்பதாக ஆா்.எஸ். மங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினருடன் சென்ற காவல் துறையினா் மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்குப் பின் புதைத்தனா்.