ராமநாதபுரம்

வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சி: ஒருவா் கைது

DIN

திருவாடானை அருகே வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்தவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரை கைது செய்தனா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில் மனைவி கலைச்செல்வி (38). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டாா்.

இதனை அறிந்த மா்ம நபா் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்த போது கலைச்செல்வி வீட்டிற்கு அவரது மாமா வந்துள்ளாா். அப்போது அந்த மா்ம தப்பி ஓட முயறசித்த போது அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அவா் ஆனந்தூரைச் சோ்ந்த காளிமுத்து மகன் நடராஜன் (55) என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடா்ந்து நடராஜனை ஆா்.எஸ் மங்கலம் போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT