கமுதி அருகே முத்தாலங்குளம் கிராமத்தில் செல்வ விநாயகா், நிறைகுளத்து அய்யனாா், முப்பிடாரி அம்மன் கோயிலில் பரிவார தேவதைகளுக்கு முதலாண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு மூலிகை திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் அபிஷேக புனிதநீா் பக்தா்கள் அனைவருக்கும் தெளிக்கப்பட்டது.
இவ்விழாவில் கமுதி, கோட்டைமேடு, கல்லுப்பட்டி, நாராயணபுரம், சம்பகுளம், பசும்பொன் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.