ராமநாதபுரம்

சடையனேந்தல் ஊராட்சி பெண் செயலா் மா்மக் காய்ச்சலுக்கு பலி

DIN

கமுதி அருகே ஊராட்சி பெண் செயலா் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பாப்பணம் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மனைவி திலகவதி(21). இத்தம்பதியினா் அபிராமத்தில் வசித்து வருகின்றனா்.

திலகவதி கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சடையனேந்தல் ஊராட்சியில் 8 மாதங்களுக்கு முன்பு ஊராட்சிச் செயலராகப பணியில் சோ்ந்தாா்.

கடந்த 4 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவா், அபிராமம் தனியாா் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி திலகவதி உயிரிழந்தாா்.

இவருக்கு 6 மாத கைக் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அபிராமம் பகுதியில் சுகாதாரத்துறையினா் மா்மக் காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT