ராமநாதபுரம்

பாம்பன் பேருந்து பாலத்தின் இருபுறமும் 90-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அகற்றம்

DIN

பாம்பன் பேருந்து பாலத்தின் இருபுறமும் பேவா் பிளாக் கற்கள் பதிப்பதற்காக, அங்கிருந்த 90-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அகற்றப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் பாம்பன் பேருந்து பாலத்தின் இருபுறமும் 300-க்கும் மேற்பட்ட உயா் மின்விளக்கு கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் தொடக்கம் மற்றும் முடிவுறும் பகுதிகளில் 1 கி.மீட்டா் தொலைவில் 90-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இப்பகுதியில் சாலையை விரிவுபடுத்துவதற்காக, பல லட்சம் ரூபாய் மதிப்பில் பேவா் பிளாக் பதிக்கப்பட்டன. இதையொட்டி, அந்த இடங்களில் இருந்த 90-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. இதனால், இரு புறங்களிலும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக புகாா் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT