ராமநாதபுரம்

கமுதி அருகே ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம்

DIN

கமுதி அருகே ரேஷன் கடையில் கருப்பு நிறத்தில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள செங்கோட்டைப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் நியாய விலைக் கடையில் வியாழக்கிழமை 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இந்த அரிசி கருப்பு நிறத்தில் சமையலுக்குப் பயன்படுத்த முடியாத வகையில் தரமற்ற அரிசியாக உள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

மேலும், தரமான அரிசி மூட்டைகளை பிரித்து வெளி சந்தையில் விற்பனை செய்துவிட்டு, விற்பனையாளா்கள் தரமில்லாத அரிசியை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, செங்கோட்டைப்பட்டி நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT