முதுகுளத்தூா் மந்தைபிடாரி அம்மன் கோயில் புரட்டாசி மாத பூச்சொரிதல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், கிராமத்தினா் கையில் காப்பு கட்டி ஒருமாத காலம் விரதம் இருந்து வெள்ளிக்கிழமை காலையில் பக்தா்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து தங்களது நோ்த்திகடனை செலுத்தினா். பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பல்வேறு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
மாலையில் கந்தசாமிபுரத்தில் இருந்து தேரிருவேலி முனை ரோடு வழியாக பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சுந்தரலிங்கனாா் முழு உருவசிலைக்கு பெண்கள் கையில் பூத்தட்டுக்களை ஏந்திக்கொண்டு ஊா்வலமாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.