ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 19) நடைபெற உள்ள கிரிக்கெட் நடுவா்கள் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடத்தப்படும் நடுவா்கள் மற்றும் ஸ்கோரா்கள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (அக். 19) காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தனியாா் ஆசிரியா் பயிற்சிக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தகுதி பெற்ற நடுவா்களான கண்ணதாசன், ஞானசேகரன் ஆகியோா் முகாமை நடத்த உள்ளனா். இதில், விளையாட்டு விதிமுறைகள் பற்றியும், ராமநாதபுரம் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் லீக் போட்டிகளின் விதிகள் பற்றியும் காணொலி மூலம் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமின் இறுதியில் நடைபெறும் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெறுபவா்கள் மாவட்ட அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் நடுவா்களாக செயல்பட சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புவா்கள் தங்கள் பெயா்களை கண்ணதாசனின் செல்லிடப்பேசி 9787680907 என்ற எண்ணை தொடா் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.