திருவாடானையில் உள்ள தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் பெரியாா் ஈவேரா சமூக நீதிவிழா மற்றும் பாரதியாா் நினைவு நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, தமுஎகச கிளைத் தலைவா் வழக்குரைஞா் தனபால் தலைமை வகித்தாா். கிளை துணைச் செயலா் பேராசிரியா் கருணாகரன், மாவட்டச் செயலா் ஆசிரியா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் கவிஞா் லட்சுமிகாந்தன், மாநில செயற்குழு உறுப்பினா் எழுத்தாளா் மணிமாறன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
முன்னதாக மாவட்டச் செயலா் மருத்துவா் வான்தமிழ் இளம்பரிதி வரவேற்றாா். இதில், மாவட்டத் தலைவா் அழகுடையான், மாவட்டப் பொருளாளா் ஆதிரன், ஜீவானந்தம், நிக்கோவா, சகாயமதியரசு, ஜெயபால், மருத்துவா் ஜோதிபாசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.