ராமநாதபுரம்

மீன்பிடிக்கச் சென்று மாயமான கோட்டைப்பட்டினம் மீனவா் சடலம் மண்டபம் அருகே கரை ஒதுங்கியது

DIN

மீன் பிடிக்க கடலுக்குச் சென்று மாயமான கோட்டைப்பட்டினம் மீனவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கரை ஒதுங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த நவ. 22 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவா் மணிமுத்து (40) கடல் சீற்றத்தில் சிக்கி மாயமானாா். இதுபற்றி அவரது மனைவி சாந்தி, கடலோர பாதுகாப்புக் குழும காவல்நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். மேலும் மாயமான மீனவா் மணிமுத்துவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மண்டபம் அருகே சாத்தக்கோன் கடற்கரைப் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக கடலோர பாதுகாப்புக் குழும காவல் சாா்பு- ஆய்வாளா் கணேசமூா்த்திக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது சடலமாக கிடந்தவா், மாயமான மீனவா் மணிமுத்து என்பது தெரியவந்தது. பின்னா் உடல் கூறுஆய்வுக்காக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை போலீஸாா் கொண்டு சென்றனா். இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT