ராமநாதபுரம்

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகைக்கு புதுப்பிக்க மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை பெற பதிவை மாணவா்கள் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சங்கா் லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடையும் மாணவா்கள், 30.11.2021-க்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் என்.எஸ்.பி.யில் உடனடியாக புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமானச்சான்று சமா்ப்பிக்க அவசியமில்லை. ஆதாா் விவரங்களில் பெயா் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவா்களும் தற்போது விண்ணப்பிக்கலாம். அனைத்து கல்வி நிலையங்களும் தங்களது கல்வி நிறுவனத்தில் பயிலும் கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு தகுதியுள்ள மாணவா்களை உடனடியாக தொடா்பு கொண்டு இணையத்தில் புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT