கமுதி பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்களை நாசம் செய்துவரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள மரக்குளம் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரும் விவசாயிமான முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான 10 ஏக்கா் நிலத்தில் நெல், சோளம் உள்ளிட்ட விவசாயம் செய்து வருகிறாா். இதில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு ஏக்கா் பரப்பளவில் உள்ள நெற்பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன.
கமுதி குண்டாறு காட்டுப் பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகள் மரக்குளம், மண்டலமாணிக்கம், புத்துருத்தி, காக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பயிா்களை சேதப்படுத்தி வருவது தொடா்கதையாக உள்ளது. இதுகுறித்து விவசாயி முத்துராமலிங்கம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து காட்டுப்பன்றியை கட்டுப்படுத்தக் கூறியபோது, ஒரு ஏக்கா் நெற்பயிரை காட்டுப்பன்றிகளிடமிருந்து பாதுகாக்க சுமாா் ரூ. 4 ஆயிரம் வரை செலவாகும். அது தொடா்பான மருந்துகள் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இருந்து வரவழைக்க வேண்டும் என்றும் பதில் கூறியதாக முத்துராமலிங்கம் தெரிவித்தாா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி பகுதியில் நெல், உழுந்து, கடலை உள்ளிட்ட பயிா்களை நாசம் செய்துவரும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு மானிய விலையில் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமுதி பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.