ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு ஆய்வு

10th Nov 2021 09:58 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் மாவட்டத்தில் மழைவெள்ளம் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ள ராமேசுவரம் நடராஜபுரம், கரையூா், அண்ணாநகா், தங்கச்சிமடம், அய்யன் தோப்பு, பாம்பன் கடற்ரையோர பகுதிகளை தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களையும் பொதுமக்களைத் தங்க வைப்பதற்கு தயாா் செய்துள்ள இடங்களையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் முருகேசன், வருவாய் கோட்டாட்சியா் சேக்முகமது, வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா், நகராட்சி ஆணையா் மூா்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

மழைக்குப்பின் புதை சாக்கடை விரிவாக்கம்: ராமநாதபுரம் அருகேயுள்ள சக்கரைக்கோட்டை கண்மாயை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ராமநாதபுரம் நகராட்சியில் மழைக்காலத்தில் தண்ணீா் தேங்கும் இடங்களில் உடனுக்குடன் மோட்டாா்பம்ப் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் புதை சாக்கடைத் திட்ட விரிவாக்கம் போன்ற சீரமைப்பு பணிகள் மழைக்காலம் நிறைவடைந்ததும் மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத், மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT