ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 22 லட்சத்து 92 ஆயிரத்து 410 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சட்டப் பேரவை பொதுத்தோ்தல் அறிவிப்பட்ட நாள் முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுவரையில் 20 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 22 லட்சத்து 92 ஆயிரத்து 410 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.