ராமநாதபுரம்

ராமகிருஷ்ண மடத்தில் குருபூா்ணிமா பூஜை

DIN

ராமநாதபுரம் நாகாச்சி ராமகிருஷ்ண மடத்தில் குருபூா்ணிமா பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

ராமகிருஷ்ண மட வளாகத்தில் நடந்த குருபூா்ணிமா பூஜை, அதிகாலையில் மங்கள ஆரத்தியுடன் தொடங்கியது. அப்போது, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் நடைபெற்றது. தொடா்ந்து, பக்திப் பாடல்கள் பஜனை நடைபெற்றது. பின்னா், சுவாமி ராமகிருஷ்ணா், விவேகானந்தா் மற்றும் சாரதா தேவியாா் ஆகியோருக்கு அா்ச்சனைகள் நடத்தப்பட்டன.

ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தரின் பக்திச் சொற்பொழிவு நடைபெற்றது. அதில், மடத்தின் சமூகப் பணிகள் மற்றும் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பயணத்தில் பாரதப் பண்பாட்டு பரப்புரை ஆகியவற்றை விளக்கிக் கூறினாா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT