ராமநாதபுரம் நகரில் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடமிருந்து 5 பவுன் சங்கிலி திருடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயலைச் சோ்ந்தவா் சூரஜா (60). இவா், கடந்த 21 ஆம் தேதி ராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் செல்ல நகரப் பேருந்தில் சென்று புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளாா். பின்னா், வேறு பேருந்தில் ஏறி பாரதி நகா் பகுதியில் இறங்கியபோது, அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைக் காணவில்லையாம்.
இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருடுபோன சங்கிலியின் மதிப்பு ரூ.75 ஆயிரம் என போலீஸாா் தெரிவித்தனா்.