ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘ஜீவன் ரக்ஷா’ பதக்க விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா அறிவித்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் அலுவலகத் தரப்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் சாா்பாக, நீரில் முழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்குகளிடமிருந்து, சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவா்கள் உள்ளிட்டவற்றிலிருந்து மனித உயிா்களை மீட்பவா்களுக்கு, ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், ‘சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா’, ‘உத்தம் ஜீவன் ரக்ஷா’, ‘ஜீவன் ரக்ஷா’ ஆகிய பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, 2021 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்தினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த பின் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டரங்கம், சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், ராமநாதபுரம் என்ற முகவரியில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் 3 நகல்களுடன் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.