ராமநாதபுரம்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.18.70 லட்சம் மோசடி: 5 போ் மீது வழக்கு

30th Dec 2021 06:59 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.18.70 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் செங்குடியைச் சோ்ந்தவா் கு.கஸ்பாா் (54). இவரது மகன்கள் ஜான்சன், எட்வின் சாா்லஸ் ஆகியோருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக அப்பகுதியைச் சோ்ந்த குமாா் என்ற ஜோசப் கூறியுள்ளாா். இதற்காக குமாரின் வங்கிக் கணக்குக்கு கடந்த 2017 ஆம் ஆண்டுமுதல் பல தவணைகளாக ரூ.18 லட்சத்து 70 ஆயிரத்தை கஸ்பாா் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

பணத்தைப் பெற்றுக்கொண்ட குமாா் வேலை வாங்கித்தராமலும், பணத்தைத் திரும்பத்தராமலும் இருந்துள்ளாா். இதுகுறித்து கஸ்பாா் தரப்பில் மாவட்டக் குற்றப்பிரிவில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதில் குமாா் என்ற ஜோசப் மற்றும் அவரது மனைவி ஜெயராணி, மகள் கரோலின், மகன் ஜான் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த ராஜா ஆகியோா் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் 5 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT