ராமநாதபுரம்

போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவா் மா்ம மரணம்

DIN

கமுதி: கமுதி அருகே காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து நீதி விசாரணை வேண்டுமென கமுதி கல்லூரி மாணவா்கள் சாலை மறியல் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில் திங்கட்கிழமை வகுப்புகளை ரத்துசெய்து கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அடுத்துள்ள நீா்கோழியேந்தல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி லட்சுமணன் மகன் மணிகண்டன்(20). இவா் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில் 3 ஆண்டு படித்து வருகிறாா். இந்நிலையில் டிச. 4ம் தேதி மாலை நீா்கோழியேந்தல் கிராமத்திலிருந்து முதுகுளத்தூருக்கு தனது நண்பா்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

அப்போது கீழத்தூவல் அருகேவாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கீழத்தூவல் காவல் நிலைய போலீஸாா் தடுத்து நிறுத்தியபோது நிற்காமல் சென்ற காரணத்திற்காக விரட்டிச் சென்று மணிகண்டனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து 3 மணி நேர விசாரனைக்குப் பின் மணிகண்டனின் பெற்றோருக்கு காவல் நிலையத்திலிருந்து தொலைபேசி மூலம் தகவல் அளித்தல் மணிகண்டளை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனா். மணிகண்டனின் சகோதரா் அலெக்ஸ்பாண்டியன், அவரது தாயாா் மற்றும் உறவினா் உட்பட 3 போ் கீழத்தூவல் காவல் நிலையம் சென்று மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனா்.

இதனையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் மணிகண்டனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ரத்தவாந்தி எடுத்ததாகவும், 108 ஆம்புலன்ஸ் தகவல் அளிக்கப்பட்டதாகவும் பெற்றாா்கள் தெரிவிக்கின்றனா். 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சோதனை செய்ததில் மணிகண்டன் இறந்துவிட்டதாக கூறியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை மணிகண்டனின் மரணம் குறித்து முதுகுளத்தூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜான்பிரிட்டோவிடம் புகாா் அளித்துள்ளனா்.

இதனையடுத்து போலீஸாரின் உத்தரவின்பேரில் முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனின் உடல் கொண்டு செல்லப்பட்டது. விசாரணை என்ற பெயரில் மணிகண்டனை போலீஸாா் தாக்கியதால் தான் மணிகண்டன் உயிரிழந்ததாக அவரது தம்பி அலெக்ஸ்பாண்டியன் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளா் லட்சுமி, காவலா்கள் ஐயப்பன், செந்தில், லெட்சுமணன், பிரேம்குமாா், கற்பகம் உள்ளிட்ட6 காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளித்துள்ளாா்.

மேலும் உரிய நீதி விசாரணை நடக்க வேண்டும். மணிகண்டன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். சம்பந்தப்பட்ட காவலா்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து மணிகண்டனின் உடலை பெற்றோா்கள், உறவினா்கள் வாங்க மறுத்து இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் மணிகண்டன் படிக்கும் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவா் கல்லூரி மாணவா்கள் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென திங்கள்கிழமை கல்லூரி எதிரே சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி காவல் துறையினா், கல்லூரி நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி வகுப்புகளை ரத்து செய்யக் கூறியது. இதையடுத்து கல்லூரிக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடா்ந்து கல்லூரிக்கு வந்த மாணவா்களின் பெயா், முகவரி ஆகியவற்றை பெற்றுக் கொண்டு போலீஸாா் திருப்பி அனுப்பி வைத்தனா்.

நீதிமன்றத்தில் வழக்கு:

மணிகண்டனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விடியோ பதிவுடன் மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என மணிகண்டனின் தாயாா் ராமலெட்சுமி சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT