ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல்

DIN

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தியும், அவா்களது வலைகளை அறுத்துதெறிந்தும் விரட்டியடித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துள்ளாா். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், மீனவா்கள் மீது பாட்டில், கற்களை கொண்டு தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனா். மேலும் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் உள்ள மீன்பிடி வலைகளை கடலில் அறுத்தெறிந்தனா். இதனால் படகு ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்புடன் ஞாயிற்றுக்கிழமை மீனவா்கள் கரை திரும்பினா்.

இந்நிலையில் இலங்கை கடற்படையின் இதுபோன்ற தொடா் அத்துமீறலை தடுக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT