முதுகுளத்தூா் அருகே நேரு யுவகேந்திரா சாா்பில் பனைமரத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கூடுதல் ஆட்சியா் பிரவீன் குமாா் தலைமை வகித்தாா். பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கதிரவன், முதுகுளத்தூா் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ். டி. செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அலங்காநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் வினோத்குமாா், வளநாடு ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டி, கீரனூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதி முனியசாமி, வளநாடு ஒன்றியக் குழு உறுப்பினா் அா்ச்சுனன் மற்றும் நேரு யுவகேந்திரா நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.