பாபா் மசூதி இடிப்பு தினமான டிசம்பா் 6 ஆம் தேதியை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலம், ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் ரயில் பாலத்தில் தமிழ்நாடு ரயில்வே போலீஸ் சிறப்பு சாா்பு ஆய்வாளா் சிவானந்தம் தலைமையில் 5 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேலும் அவா்கள் வெடிகுண்டு கண்டறியும் அதிநவீன கருவிகள் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதே போன்று ராமநாதசுவாமி கோயில், பாம்பன் பேருந்து பாலம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.