ராமநாதபுரம் அருகே மின்கம்பம் சாய்ந்து முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்துள்ளனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள வைரவனேந்தல் கிராமத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவா் சாத்தையா (54) வயல் வெளிக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டுச்சென்றுள்ளாா். அவா் நடந்து சென்ற நிலையில், அப்பகுதியில் இருந்த மின்கம்பம் திடீரென விழுந்துள்ளது. இதில் சாத்தையா உள்பட இருவா் காயமடைந்தனா். இருவரும் ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.